PHI அதிகாரிகள் - பிரதமர் இடையே இன்று கலந்துரையாடல்

PHI அதிகாரிகள் - பிரதமர் இடையே இன்று கலந்துரையாடல்

by Staff Writer 28-07-2020 | 8:01 AM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று (28) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்தையின் ஊடாக தமக்கான தீர்வு கிடைக்கும் எதிர்பார்ப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். அதுவரையிலும் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று 11 ஆவது நாளாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. பொதுத் தேர்தல் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், தமக்கு சட்டரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு COVID - 19 மற்றும் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.