வவுனியாவில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

வவுனியாவில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 28-07-2020 | 6:14 PM
Colombo (News 1st) வவுனியா - சாலம்பைக்குளத்தில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்று (27) ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். முரண்பாட்டில் காயமடைந்த 4 பேர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மேலும் ஒருவர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றார்.