நிதி மோசடியில் நஜீப் ரஸாக் குற்றவாளியென நிரூபணம்

நிதி மோசடியில் மலேசிய முன்னாள் பிரதமர் குற்றவாளியென நிரூபணம்

by Staff Writer 28-07-2020 | 11:55 AM
Colombo (News 1st) பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் (Najib Razak) குற்றவாளியென நிரூபணமாகியுள்ளார். இவருக்கு எதிராக முதற்கட்டத்தில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதாகவும் அவையனைத்தும் சந்கேத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்.