காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு பிரதமர் கோரிக்கை

தேர்தல் தினத்தன்று காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு பிரதமர் மக்களிடம் கோரிக்கை

by Staff Writer 28-07-2020 | 8:26 PM
Colombo (News 1st) தேர்தல் தினத்தன்று காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்களுடைய பெறுமதியான வாக்கை வீணாக்காதீர்கள். காலையிலேயே வாக்களித்து விடுங்கள். மாலையாகும் போது என்ன நடக்குமோ தெரியாது
என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், நேற்று (27) மாவத்தகமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறினார்.