புராதன கட்டடம்: ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

குருநாகல் புராதன கட்டடம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு மேயருக்கு உத்தரவு

by Staff Writer 28-07-2020 | 5:14 PM
Colombo (News 1st) தகர்க்கப்பட்டுள்ள புராதன கட்டடம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு குருநாகல் நகர மேயருக்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால் சமர்ப்பிக்கப்பட்ட 10 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார். இதேவேளை, நகர அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கான அனைத்து கூட்ட அறிக்கைகளையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வடமேல் மாகாண ஆளுநருக்கு குருநாகல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.