மீனவர் ஒருவரைக் காணவில்லை

கட்டைக்காடு கடலில் படகு மூழ்கியது: மீனவர் ஒருவரைக் காணவில்லை

by Staff Writer 28-07-2020 | 6:22 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கட்டைக்காடு கடலில் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார். பருத்தித்துறையை சேர்ந்த 70 வயதான மீனவரே காணாமற்போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார். கடலில் மூழ்கிய படகில் பயணித்த மற்றுமொரு மீனவர் வேறு படகில் சென்றவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார். கட்டைக்காட்டிலிருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு இவர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். கடலில் மூழ்கிக் காணாமற்போயுள்ள மீனவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதேச மீனவர்களும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்