by Staff Writer 28-07-2020 | 7:59 PM
Colombo (News 1st) நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரகந்த தோட்டத்திலுள்ள பொதுமக்கள் குடியிருப்பில் பரவிய தீயினால் குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன.
இன்று முற்பகல் 10.30 அளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 40 பேர் வரை வசித்து வந்தனர்.
தொழிலாளர் குடியிருப்பில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், லிந்துலை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.