English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jul, 2020 | 7:59 pm
Colombo (News 1st) நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரகந்த தோட்டத்திலுள்ள பொதுமக்கள் குடியிருப்பில் பரவிய தீயினால் குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன.
இன்று முற்பகல் 10.30 அளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பிலேயே தீ பரவியுள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 40 பேர் வரை வசித்து வந்தனர்.
தொழிலாளர் குடியிருப்பில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், லிந்துலை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 Jan, 2021 | 03:49 PM
07 Sep, 2020 | 06:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS