by Staff Writer 27-07-2020 | 2:58 PM
Colombo (News 1st) நாட்டின் வங்கிகளில் விநியோகிக்கப்படும் டெபிட் கார்ட்களை (Debit Card) பயன்படுத்தி இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சிலர் இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த டெபிட் கார்ட்களுக்காக குறித்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட சலுகைப் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் நாட்டிலுள்ள வங்கிகளுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த மோசடி குறித்த ஆரம்பத்தில் தெரியவந்துள்ளதால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடிந்ததாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி குறித்த நிறுவனங்கள் மூலம் மீள பெறப்பட்டுள்ள நிலையில் மிகுதி பணத்தை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த பண மோசடி குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.