கத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 55 பேர் நாடு திரும்பினர்

by Staff Writer 27-07-2020 | 2:22 PM
Colombo (News 1st) கத்தாரில் சிக்கியிருந்த 55 இலங்கையர்கள் இன்று (27) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். கத்தார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். நாடு திரும்பியவர்களில் 8 பேர் சாதாரண பயணிகள் எனவும் ஏனையவர்கள் கப்பலில் பணியாற்றுவோர் எனவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார். இவர்கள் அனைவருக்கும் PCR சோதனைகளை நடாத்தி, தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடமை நேர முனாரைமயாளர் கூறினார்.