தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டிற்கு...

IDH இலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கந்தக்காட்டிற்கு அனுப்பிவைப்பு 

by Staff Writer 26-07-2020 | 12:36 PM
Colombo (News 1st) IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்று, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளர் மீண்டும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த நோயாளருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவரும் கந்தக்காடு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். IDH வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவர் மூலம் சமூகத்தில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளது.