மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது 

Facebook ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது 

by Staff Writer 26-07-2020 | 11:05 AM
Colombo (News 1st) பிலியந்தலை - கெஸ்பேவ புதிய குறுக்கு வீதியில் அபாயகரமான மோட்டார் சைக்கிள் பந்தயத்தை நடத்திய 36 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக இந்த மோட்டார்சைக்கிள் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களின் 24 மோட்டார்சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஏனைய செய்திகள்