by Staff Writer 26-07-2020 | 8:59 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்றாகும்.
இன்றைய தினம் (26) உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 80 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.