சிறைக்குள் போதைப்பொருட்களை வீசிய நால்வர் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை வீசிய நால்வர் கைது

by Staff Writer 26-07-2020 | 7:23 AM
Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களை சிறைச்சாலைக்குள் எறிந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்கே நபர்களில் 19 மற்றும் 21 வயதான இரண்டு யுவதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிரான மற்றும் ஏத்துகால பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கும் இடையில் தொடர்புள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்