நாட்டில் 2770 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2770 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 26-07-2020 | 7:00 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (25) 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் பெலாரஸிலிருந்து நாடு திரும்பியவர்களே நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2,103 பேர் குணமடைந்துள்ளனர்.