தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் - தெரிவத்தாட்சி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல் 

by Staff Writer 26-07-2020 | 8:16 AM
Colombo (News 1st) மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று (26) கொழும்பிற்கு அழைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு சுற்று பேச்சுவார்ததை இன்று நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.