சென்னையிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கு கொரோனா

சென்னையிலிருந்து நாடு திரும்பிய நால்வருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 25-07-2020 | 6:00 PM
Colombo (News 1st) நாட்டில் இன்று மேலும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கண்காணிப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2768 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 2103 பேர் குணமடைந்துள்ளனர்.

ஏனைய செய்திகள்