இன்று 17 பேர் குணமடைந்தனர்; 10 பேருக்கு தொற்று

17 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்; இன்று 10 பேருக்கு தொற்று

by Staff Writer 24-07-2020 | 4:21 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 17 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளனர். இதற்கமைய, தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 094 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோயாளர்கள் மேலும் 10 பேர் பதிவாகியுள்ளனர். கந்தக்காடு முகாமிலுள்ள 9 பேருக்கும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஒருவருக்கும் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2, 769 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளாகிய 648 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.