வவுனியாவில் கட்டட நிர்மாணத் தொழிலாளி சடலமாக மீட்பு

வவுனியாவில் கட்டட நிர்மாணத் தொழிலாளி சடலமாக மீட்பு

by Staff Writer 24-07-2020 | 5:06 PM
Colombo (News 1st) வவுனியா - கிடாச்சூரி பகுதியில் கட்டட நிர்மாணத் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிடாச்சூரி பகுதியிலுள்ள வீடொன்றில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த அவர், வீட்டின் பின்புறத்தில் இருந்து நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வீட்டின் முதலாம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். செட்டிக்குளம் - மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த 35 வயதான தொழிலாளியே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.