சர்ச்சைக்குரிய கருத்து: சி.வி. விக்னேஸ்வரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 24-07-2020 | 7:19 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனிடம் பொலிஸ் தலைமையக பொலிஸார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். யாழிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணி முதல் 2 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அது தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.