கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 24-07-2020 | 3:32 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (25) 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது. கொழும்பு - நீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை மேம்பாட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ், விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய நடவடிக்கைகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.