English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Jul, 2020 | 5:48 pm
Colombo (News 1st) வௌ்ளை வேனைப் பயன்படுத்தி 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை, அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளமையினால், வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை வழக்கை ஒத்திவைப்பது சிறந்தது என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார நீதிபதிகள் குழாமிற்கு அறிவித்தார்.
09 Dec, 2021 | 02:38 PM
13 Oct, 2021 | 04:05 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS