PHI செயற்குழு இன்று கூடுகின்றது

PHI செயற்குழு இன்று கூடுகின்றது

by Staff Writer 23-07-2020 | 8:42 AM
Colombo (News 1st) இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயற்குழு இன்று (23) கூடவுள்ளது. தேர்தலின் போது சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக செயற்குழு இன்று கூடுவதாக சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்பு தொடர்பில் சட்ட ரீதியிலான அதிகாரங்கள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பானது இன்றும் தொடர்கின்றது. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின் போதும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பில் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரியவிடம் நாம் வினவினோம். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் இதன்போது தமது பிரச்சினை தொடர்பில் விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தலையிடுவதாக உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் பொதுமக்களின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதில்லை என அவர் கூறியுள்ளார். எனினும் தொற்றுநோய் தடுப்பு தொடர்பிலான பணிகளுக்கு சட்ட ரீதியற்ற வகையில் அமர்த்தப்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்