பொது சுகாதார பரிசோதகர்கள் நாளை சேவை விலகல்

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறையில் நாளை சேவை விலகல்

by Staff Writer 23-07-2020 | 6:47 PM
Colombo (News 1st) சுகயீன விடுமுறையில் நாளைய தினம் (24) சேவையிலிருந்து விலக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். தமது சங்கத்தின் செயற்குழு இன்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார். தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்களின் உறுப்பினர்கள், COVID-19,டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளிலும் இருந்து விலகியுள்ளதாக அவர் கூறினார். இதனால் தற்போது இறுக்கமான சூழல் உருவாகியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டார்.