குழாய் நீர் விநியோகத் திட்டம் தொடர்பில் மோதல்: பாலித்த தெவரப்பெரும காயம்

by Staff Writer 23-07-2020 | 8:44 PM
Colombo (News 1st) குழாய் நீர் விநியோகத் திட்டமொன்று உரிய முறையில் இடம்பெறவில்லையெனத் தெரிவித்து, அது தொடர்பில் தலையிடச் சென்ற போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பாலித்த தெவரப்பெரும காயமடைந்தார். அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர் தரப்பால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் திட்ட பொறியியலாளர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுகம - வெலிகந்த பிரதேசத்தில் செயற்படுத்தப்படும் குடிநீர் திட்டம் உரிய முறையில் இடம்பெறுவதில்லையெனத் தெரிவித்து, பாலித்த தெவரப்பெரும நேற்று இரண்டாவது நாளாகவும் தலையிட்டார். சம்பவத்தில் காயமடைந்த பாலித்த தெவரப்பெரும, மத்துகம பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, கையில் ஏற்பட்ட காயத்திற்காக திட்ட ஒப்பந்தக்காரர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.