'அங்கொட லொக்கா' உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த நடவடிக்கை

by Staff Writer 23-07-2020 | 12:54 PM
Colombo (News 1st) 'அங்கொட லொக்கா' என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு தலைவரான லசந்த பெரேரா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கைது செய்யப்படவேண்டியவரான லசந்த பெரேரா எனப்படும் குறித்த சந்தேக நபர் வௌிநாடு சென்றுள்ளதாகவே தகவல் கிடைத்துள்ளதாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் தொடர்புடைய பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் பரவியுள்ளமை தொடர்பில் சட்டரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை இலங்கை பொலிஸுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவலை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்த முடிந்தால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதன்போது குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்