பொலித்தீன் உணவுப்பொதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சட்டவிரோதமாக பொலித்தீன் உணவுப் பொதிகளை தயாரித்த 3 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை 

by Staff Writer 22-07-2020 | 12:47 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் பொலித்தீன் உணவுப் பொதிகளை தயாரித்த 3 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொலித்தீன் உணவுப் பொதிகளை விநியோகித்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் N.S. கமகே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் இம் மாதம் ஆரம்பம் முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.