ஜனாதிபதியின் காணொளியின் பின் பணயக் கைதிகள் மீட்பு

உக்ரைனில் ஆயுததாரியால் பிடிபட்ட பணயக் கைதிகள் ஜனாதிபதியின் காணொளியின் பின் விடுவிப்பு

by Staff Writer 22-07-2020 | 10:12 AM
Colombo (News 1st) உக்ரைனில் பஸ் ஒன்றை வழிமறித்து 10 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுததாரியின் கோரிக்கைகளை நிவர்த்திப்பதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky காணொளியொன்றை வௌியிட்டதை தொடர்ந்து பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆயுததாரி வெடிபொருட்களையும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஆயுததாரி ஜனாதிபதியின் காணொளியை தொடர்ந்து முதற்கட்டமாக மூவரை விடுவித்துள்ளார். எவ்வாறாயினும் பணயக் கைதிகள் அனைவரும் பின்னர் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த ஆயுததாரி - மாநில பாதுகாப்பு சேவை பிரிவில் கடமையாற்றிய 44 வயதான Maksym Kryvosh என்பவர் தெரியவந்துள்ளது.