PHI அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது

PHI அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது 

by Staff Writer 21-07-2020 | 9:01 AM
Colombo (News 1st) பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சர் வௌியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த ​வௌ்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி முதல் டெங்கு காய்ச்சல் மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளிலிருந்தும் அவர்கள் விலகியுள்ளனர். தமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மேலும் 18 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். பொது சுகாதார பரிசோதகர்கள் தமது கடமையை ஆற்றக்கூடிய வகையில், சட்ட பின்புலத்தை ஏற்படுத்துமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

ஏனைய செய்திகள்