ரிஷாட் பதியுதீனை CID-இல் ஆஜராகுமாறு உத்தரவு

ரிஷாட் பதியுதீனை 27 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

by Staff Writer 21-07-2020 | 6:20 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வருமாறு இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ரிஷாட் பதியுதீனுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் வழங்க ஆஜராகாமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.