மூளாய் பகுதியில் தங்காபரணங்கள் கொள்ளை

மூளாய் பகுதியில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்காபரணங்கள் கொள்ளை

by Staff Writer 21-07-2020 | 4:08 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்காபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேர், வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய செய்திகள்