நுகேகொடை வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலி

நுகேகொடை வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலி

by Staff Writer 20-07-2020 | 2:47 PM
Colombo (News 1st) நுகேகொடை மேம்பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸொன்று மற்றுமொரு வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த இராணுவ ஜீப்புடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் ஜீப்பின் சாரதியான இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த ஏனைய 2 சிப்பாய்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஏனைய செய்திகள்