நாவலப்பிட்டியில் பொறியில் சிக்கிய சிறுத்தையின் சடலம் மீட்பு

by Staff Writer 20-07-2020 | 7:06 PM
Colombo (News 1st) நாவலப்பிட்டி - மாப்பாகந்த பகுதியில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொறிக்குள் சிக்கிய நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொறிக்குள் சிக்கிய சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பின்னர் தப்பிச் சென்ற வழியில் இருந்த கோப்பி மரத்துக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர். பொறிக்குள் சிக்கியிருந்த போது சிறுத்தை கடும் காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர். சுமார் 7 வயதான இந்த சிறுத்தை அரிய இன சிறுத்தை வகையில் ஒன்றாகும். சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ளது.