காட்டு யானை தாக்கியதில் விரிவுரையாளர் ஒருவர் காயம்

by Staff Writer 20-07-2020 | 4:14 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பிரிவில் சேவையாற்றும் 34 வயதான விரிவுரையாளர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், விரிவுரையாளர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.