தேர்தல் சட்ட மீறல்: இதுவரை 208 பேர் கைது

தேர்தல் சட்ட மீறல்: இதுவரை 208 பேர் கைது

by Staff Writer 18-07-2020 | 5:27 PM
Colombo (News 1st) தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 190 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாடுகளுக்கு அமைய 60 வாகனங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,684 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.