கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 18-07-2020 | 3:27 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொலன்னாவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பகல் 2 மணி முதல் 16 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று பகல் 2 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதி, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்குமான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.