ஊரு ஜூவாவின் உதவியாளர் கைது

பாதாளக்குழு தலைவர்களில் ஒருவரான ஊரு ஜூவாவின் உதவியாளர் கைது

by Staff Writer 17-07-2020 | 3:30 PM
Colombo (News 1st) பாதாளக்குழு தலைவர்களில் ஒருவரான 'ஊரு ஜூவா'வின் உதவியாளர்களில் ஒருவரான ரங்க எனப்படுபவர் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 6 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 , 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைச்சம்பவங்களில் குறித்த சந்தேகநபரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், 2015 ஆம் ஆண்டு பாதுக்க பகுதியில் எரிபொருள் நிலையத்தை கொள்ளையடித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ரங்க, முச்சக்கர வண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்