அநுரகுமாரவின் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவு

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 16-07-2020 | 3:32 PM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் அரச ஊழியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தடுக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி A.H.M.D. நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தனர். ஆணைக்குழு முன்னிலையில் நாளைய தினம் (17) ஆஜராகுமாறு, ஆணைக்குழு தம்மை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு பிறப்பித்துள்ள அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.