மூன்றாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு

by Staff Writer 15-07-2020 | 9:14 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. நாளையும் (16) நாளை மறுதினமும் (17) பாதுகாப்புப் பிரிவினர் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர். இந்த இரு நாட்களிலும் வாக்களிக்க முடியாதவர்கள், இம்மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,05,085 பேர் தகுதி பெற்றுள்ளனர்.