பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது

பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கண்டியில் கைது

by Staff Writer 15-07-2020 | 11:57 AM
Colombo (News 1st) ஜப்பான் மற்றும் கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 53 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நாட்டில் பிரசித்திவாய்ந்த விகாரைகளில் உள்ள மதகுருமார்களின் பெயர்களை பயன்படுத்தி வௌிநாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போலியான இரண்டு பெயர்களுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தேக நபர் 5,379,900 ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தொடர்பில் நாட்டிலுள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் 19 இற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் காலியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.