சிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருள் விற்பனை செய்த 15 பேர் கைது 

by Staff Writer 15-07-2020 | 11:04 AM
Colombo (News 1st) களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் உள்ளிட்ட சில பொருட்களை விற்பனை செய்யும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை சிறைச்சாலை சுவரினூடாக போதைப்பொருளை வீசிய சந்தர்ப்பத்தில் இரண்டு சந்தேக நபர்கள் முதலாவதாக கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து 2 தொலைபேசிகள், சார்ஜர்கள், 2 மில்லி கிராமுக்கும் அதிக ஹெரோயின் மற்றும் புகையிலை என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13 கிராம் 730 மில்லிகிராம் போதைப்பொருள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.