கடற்படையின் புதிய தளபதியாக நிஷாந்த உலுகேத்தென்ன நியமனம்

by Staff Writer 15-07-2020 | 11:22 AM
Colombo (News 1st) நாட்டின் 24 ஆவது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேத்தென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடற்படையின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட நிஷாந்த உலுகேத்தென்ன, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா, நேற்றைய தினம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.