பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் பலி

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 14-07-2020 | 8:42 AM
Colombo (News 1st) கிரிந்த நகரில் வீதி தடைக்கருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது டிப்பர் மோதியதில் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மீது மோதிய டிப்பர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இதன்போது காயமடைந்த மேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹக்மன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 36 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே விபத்தில் உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

ஏனைய செய்திகள்