by Bella Dalima 14-07-2020 | 3:33 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வைத்தியசாலையின் எட்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.
கதிரான பகுதியைச் சேர்ந்த 36 வயதான குறித்த கைதி சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 12 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த கைதியின் சடலம் மீதான நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.