by Staff Writer 14-07-2020 | 7:49 AM
Colombo (News 1st) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இன்று (14) முதல் அமுலாகும் வகையில் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடற்படை தளபதி அட்மிரல் பியல் டி சில்வா நாளை (15) ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.