போதைப்பொருள் களஞ்சியசாலையில் சோதனை...

போதைப்பொருள் களஞ்சியசாலை அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் சோதனை

by Staff Writer 12-07-2020 | 9:50 AM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரில் பொறுப்பிலுள்ள போதைப்பொருள் களஞ்சியசாலையில் இருந்து மாதிரியொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த போதைப்பொருளுடன் வேறொரு பொருள் கலந்து விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 10 பேரடங்கிய குழுவொன்று கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் போதைப்பொருள் களஞ்சியசாலையை தமது குழுவினரினூடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாதிரியின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் மற்றும் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.