நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

by Staff Writer 12-07-2020 | 10:24 AM
Colombo (News 1st) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.