English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
10 Jul, 2020 | 4:27 pm
Colombo (News 1st) நாட்டில் 7 பல்கலைக்கழகங்களில் நிலவும் உபவேந்தர் பதவிக்கான வெற்றிடங்களை விரைவில் நிரப்பவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காக தகைமையுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், நேர்முகத் தேர்வுகளையும் நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் கலாநிதி ஜனிதா லியனகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொதுத்தேர்தல் காரணமாக தேர்தல் சட்டதிட்டங்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வை நடத்தல் அல்லது சேவைக்கு எவரையும் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையென அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், பொதுத் தேர்தலின் பின்னர் உபவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழகங்களில் உப வேந்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
18 Dec, 2020 | 02:30 PM
25 Sep, 2020 | 04:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS