லண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி

லண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 09-07-2020 | 11:54 AM
Colombo (News 1st) லண்டனில் வீடுகளின் மீது கிரேன் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். லண்டன் - போவ் (Bow) பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் நிர்மாணப்பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த 20 மீற்றர் உயரமான கிரேன் ஒன்றே வீழ்ந்ததில் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.   சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.