by Staff Writer 09-07-2020 | 7:56 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்றும் அழைக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை 9.30-இற்கு வருகை தந்த ரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சற்று நேரத்திற்கு முன்னர் அவர் அங்கிருந்து வௌியேறினார்.